அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேவையான நிலக்கரி இறக்குமதி செய்ய மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய மின்சாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோடை காலம் மற்றும் உற்பத்தி சார்ந்த தொழிற்துறையில் அதிகரித்து வரும் மின் தேவையால் மின் நுகர்வு உயர்ந்து வரும் நிலையில், ஒப்பந்தங்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்யவும் அதை கொண்டுசெல்ல வசதியாக சரக்கு ரயில் பெட்டிகளை வாங்கவும் மாநில அரசுகளை மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

உள்ளாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தனியார் நிறுவனங்களின் சுரங்கங்களில் இருந்து கூடுதல் நிலக்கரி கிடைக்க குறைந்தது 3 ஆண்டுகள் ஆகும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.