மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி நிலுவைத் தொகை – நிதியமைச்சர் விளக்கம்

மாநில அரசுகளுக்கு எட்டு மாதத்துக்கான நிலுவைத் தொகை வழங்கப்பட்டு விட்டதாகவும் இன்னும் 78 ஆயிரத்து 704 கோடி ரூபாய் நிலுவையில் இருப்பதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மார்ச் 2022 வரை மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய 8 மாத ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ளதாகவும், செஸ் நிதியில் போதிய இருப்பு இல்லாததால் ரூ.78,704 கோடி நிலுவையில் இருப்பதாகவும் நிதி அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

பொதுவாக, ஏப்ரல் முதல் ஜனவரி வரை நிதியாண்டின் 10 மாதங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு அந்த ஆண்டில் வெளியிடப்படும் என்றும், பிப்ரவரி-மார்ச் இழப்பீடு அடுத்த நிதியாண்டில் மட்டுமே வெளியிடப்படும் என்றும் நிதியமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.