திருவண்ணாமலை || வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து மாணவன் பலி..!

வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், போளுர் பகுதியை சேர்ந்தவர் செல்வி என்ற இவருக்கு வினோத்குமார் (16), தினகரன் (15) என்ற இருமகன்கள் இருந்தனர். பள்ளியில் தேர்வி நடந்து வருவதால் வினோத்குமார், தினகரன் ஆகியோர் நேற்று நள்ளிரவு வரையில் படித்து விட்டு விடியற் காலையில் தூங்க சென்றுள்ளனர்.

அப்போது, திடீரென வீட்டின் மேற்கூரை விழுந்ததது. வினோத்குமார் மற்றும் தினகரன் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அக்கம்பக்கதினர் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இதில், சிகிச்சை பலனின்றி பரிதாபாமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.