தருமபுரி || மது போதையில் தள்ளாடி தள்ளாடி வந்த பள்ளி மாணவி – அதிர்ச்சி வீடியோ.!

அரசு பள்ளி மாணவி மதுபோதையில் சாலையை கடக்க முடியாமல் தள்ளாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

இதனால் கல்வியாளர்கள், பெற்றோர்கள் மீண்டும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம், இண்டூர் பேருந்து நிலையத்தில், அரசு பள்ளி மாணவி ஒருவர் மது அருந்திவிட்டு தள்ளாடியபடி நடந்து வருவதை கண்ட பொதுமக்களில் ஒரு சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். 

இந்த விடியோக்கள் தற்போது வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

இண்டூர் சுற்றியுள்ள பகுதிகளில் அரசு மதுபான கடை இல்லை. எனவே, வேறு பகுதிக்கு சென்று மதுபாட்டில்களை மாணவி சென்று வாங்கினாரா? அல்லது மாணவிக்கு மதுவை வாங்கி கொடுத்தார்களா? என்று அந்த பகுதி மக்கள் பேசி வருகின்றனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.