போர் பிரகடனமா? முற்றாக மறுத்த ரஷ்யா: வெளிவரும் பின்னணி


உக்ரைன் மீது உத்தியோகப்பூர்வ போர் பிரகடனம் முன்னெடுக்க ரஷ்யா தயாராகி வருவதாக பரவும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யா எதிர்வரும் மே 9ம் திகதி உக்ரைன் மீது போர் பிரகடனம் மேற்கொள்ளும் என்ற தகவல் வெளியாகியது.
ஆனால், அவ்வாறான திட்டம் எதுவும் ரஷ்யாவுக்கு இல்லை எனவும், உக்ரைன் மீது முன்னெடுக்கப்பட்டு வருவது போர் அல்ல, சிறப்பு இராணுவ நடவடிக்கை மட்டுமே எனவும் ரஷ்யா விளக்கமளித்துள்ளது.

ரஷ்ய செய்தித்தொடர்பாளர் Dmitry Peskov இந்த விவகாரம் தொடர்பில் விளக்கமளித்துள்ளதுடன், மேற்கத்திய நாடுகளின் அதிகாரிகள் தரப்பு வெளியிடும் தரவுகளில் உண்மை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ் கடந்த வாரம் இந்த விவகாரம் தொடர்பில் முதன்முறையாக குறிப்பிட்டார்.
மே 9ம் திகதி உக்ரைன் மீதான உத்தியோகப்பூர்வ போர் பிரகடனம் முன்னெடுக்கப்படும் எனவும் பென் வாலஸ் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அதற்கான தரவுகள் எதுவும் தம்மிடம் இல்லை எனவும், போர் பிரகடனத்திற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே பென் வாலஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, மே 9ம் திகதி ரஷ்ய தலைநகரில் இராணுவ பேரணியை முன்னெடுக்கும் அதே வேளை, தற்போது மரியுபோல் நகரிலும் பேரணி முன்னெடுக்கப்படலாம் என தெரிய வந்துள்ளது.

ஆனால் அவ்வாறான ஒரு சூழல் உருவாகும் என்றால், அரசியல் சூழல்கள் மிகக்கடுமையாக வாய்ப்புள்ளதாக உக்ரைன் அரசியவ்வாதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மரியுபோல் மட்டுமின்றி, ஒடெசா, கீவ் உள்ளிட்ட பகுதிகளிலும் ரஷ்யா வெற்றிப் பேரணியை முன்னெடுக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.