கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.
போர்ட் போர்டல் நகரிலிருந்து அந்நாட்டின் தலைநகர் கம்பாலா-வுக்கு, 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது.
போர்ட் போர்டல் நகருக்கு அருகே திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையில் தறிக்கெட்டு ஓடியது. தொடர்ந்து, சாலையோரத்தில் இருந்த தேயிலை தோட்டத்துக்குள் பாய்ந்த பஸ் பலமுறை உருண்டு விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 20 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 13 பேர் பலத்த காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.