ஜிக்னேஷ் மேவானிக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை!

குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் போலீசார் அனுமதியின்றி ‘
விடுதலை பேரணி
’ என்ற பெயரில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பேரணியில்
குஜராத்
மாநில சுயேட்சை எம்.எல்.ஏ.,
ஜிக்னேஷ் மேவானி
கலந்து கொண்டார். ஜிக்னேஷ் மேவானியின் ராஷ்டிரிய தலித் அதிகார் அமைப்பை சேர்ந்த சிலரும் இந்த பேரணியில் பங்கேற்றனர்.

இதையடுத்து, அனுமதியின்றி பேரணி நடத்தியதற்காக ஜிக்னேஷ் மேவானி உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு குஜராத் மாநில மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையின் போது, அனுமதியின்றி கூட்டம் கூடியது, பேரணி நடத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஜிக்னேஷ் மேவானி உள்பட 10 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கில் ஜிக்னேஷ் மேவானி உள்பட 10 பேருக்கு தலா 3 மாதங்கள் சிறை தண்டனையும், தலா ரூ.1000 அபராதம் விதித்தும்
மாஜிஸ்திரேட் நீதிமன்றம்
உத்தரவிட்டது. எனவே, ஜிக்னேஷ் மேவானி எந்நேரமும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, பிரதமர் மோடி குறித்து ட்விட்டரில் அவதூறாகக் கருத்து பதிவிட்டதாக பதிவான புகாரின்பேரில், ஜிக்னேஷ் மேவானியை அசாம் மாநில போலீசார் கைது செய்தனர். அதில், ஜாமீனில் வெளியே வந்த ஜிக்னேஷ் மேவானி, பெண் காவலர் ஒருவரை தாக்க முயன்றதாக மீண்டும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கிலும் ஜிக்னேஷ் மேவானிக்கு ஜாமீன் கிடைத்தது. இதையடுத்து, அவர் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் குஜராத் மாநிலத்தில் தேர்தல் வரவுள்ள நிலையில், அதற்கு முன்பாக தன்னுடைய பெயரைக் கெடுக்க சதி நடைபெற்று வருகிறது. எனவே, பொய் வழக்கில் தன்னை சிக்க வைப்பது தொடர்பாக, பிரதமர் அலுவலகம் சதியில் ஈடுபட்டு வருவதாக ஜிக்னேஷ் மேவானி குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.