பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக 18 வீரர்களை உள்ளடக்கிய இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணி எதிர்வரும் 8 ஆம் திகதி பங்களாதேஷிற்கு செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கமைய முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னர் 2 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியொன்றில் இரு அணிகளும் விளையாடவுள்ளன. இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 15 ஆம் திகதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி 23 ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை அணி
திமுத் கருணாரத்ன (தலைவர்), காமில் மிஷ்ரா, ஓசத பெர்னாண்டோ, அஞ்செலோ மெத்திவ்ஸ், குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல, தினேஷ் சந்திமால், ரமேஷ் மெண்டிஸ், சாமிக்க கருணாரத்ன, சுமிந்த லக்ஷான், கசுன் ராஜித, விஷ்வ பெர்னாண்டோ, அசித பெர்னாண்டோ, டில்ஷான் மதுசங்க, பிரவீன் ஜயவிக்ரம, லசித் எம்புல்தெனிய