பிரதி சபாநாயகராக ரஞ்ஜித் சியம்பலபிட்டிய மீண்டும் தெரிவு

பிரதி சபாநாயகராக, முன்னாள் பிரதி சபாநாயகர் ரஞ்ஜித் சியம்பலபிட்டி மீண்டும் இன்று (5) தெரிவானார்.

பிரதி சபாநாயகர் ரஞ்ஜித் சியம்பலபிட்டிக்கு 148 வாக்குகளும் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்காருக்கு 65  வாக்குகள் அளிக்கப்பட்டன.

கடந்த 2020 ஆகஸ்ட் 20 – தொடக்கம் நேற்று முன்தினம் வரை பிரதி சபாநாயகராக செயல்பட்டு வந்த ரஞ்ஜித் சியம்பலபிட்டிய,  தனது பதவியை இராஜிமா செய்ததையடுத்து பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் பதவி வெற்றிடமானது.

இதனால் இன்றைய தினம்  ,ஆளுந்தரப்பில் இருந்து முன்னாள் பிரதி சபாநாயகர் ரஞ்ஜித் சியம்பலபிட்டியவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபா டி சில்வா முன்மொழிந்தார்.

அதனை பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த  உறுதி செய்தார் .

எதிர்க்கட்சியின் தரப்பில்  ,இம்தியாஸ் பாக்கீர்  மார்க்காரின் பெயர் முன்மொழியப்பட்டது .பாராளுமன்ற உறுப்பினர் லஷ்மன் கிரியெல்ல அதனை வழிமொழிந்தார்

ஒன்றுக்குமேற்பட்ட பெயர்கள் பிரதி சபாநாயகர் தெரிவுக்கு முன்மொழிப்பட்டதினால் ,பிரதி சபாநாயகர் வாக்களிப்பின் மூலம் தெரிவுசெய்யப்படுவார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் ,வாக்கு  அட்டைகளை பயன்படுத்தி வாக்களித்தனர்.

இதன்போது முன்னாள் பிரதி சபாநாயகர் ரஞ்ஜித் சியம்பலபிட்டிக்கு 148 வாக்குகளும் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர்   மார்க்காருக்கு 65  வாக்குகள் அளிக்கப்பட்டன.

வாக்களிப்பில் கலந்துகொள்ளாதோரின்எண்ணிக்கை 06

செல்லுபடியற்ற வாக்குகளின் எண்ணிக்கை 03

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.