இலங்கையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு.. தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை உடைத்து விறகாக விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.!

இலங்கையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு ஏலம் விடப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை உடைத்து விறகாக விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எல்லைத் தாண்டி மீன்ப்பிடித்ததாக இலங்கை அரசுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 135 படகுகள் அண்மையில் ஏலம் விடப்பட்டன.

இந்நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில்  எரிவாயு சிலிண்டரின் விலை சுமார் 4,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால்  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக தமிழக மீனவர்களின் படகுகளில் இருந்து கட்டைகள் உடைக்கப்பட்டு  விறகாக விற்கப்படுகிறது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.