வீட்டை விட்டு வெளியேறினார் மகிந்த ராஜபக்சே! வெளிநாடு தப்ப முடிவு?



இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே கொழும்பு அரசு மாளிகையை விட்டு வெளியேறினார்.

இலங்கை அரசுக்கு எதிராக அங்கு போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ராஜபக்சே அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் ,நேற்று போராட்டம் வெடித்தது.

இதில் மகிந்த ராஜபக்சேவின் வீட்டிற்கும் தீ வைக்கப்பட்டது. இதற்கான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது . இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி பிரதமராக இருக்கும் ராஜபக்ச சகோதரர்கள் பதவி விலக கோரி மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

இந்த நிலையில் கொழும்பு அரசு மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். ராணுவம் அவர்களை அப்புறப்படுத்தியதை அடுத்து மாளிகையிலிருந்து ராஜபக்சே வெளியேறினார்.

இதேவேளை மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துள்ள மகிந்த வெளிநாடு ஒன்றுக்கு தப்பிச் செல்லலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

நைஜீரியாவில் இருந்து சிறப்பு விமானம் ஒன்று இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.