சீனாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா – புதிதாக 1,183 பேருக்கு தொற்று உறுதி

பெய்ஜிங்,

உலகின் முதல் கொரோனா தொற்று சீனாவின் உகான் மாகாணத்தில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு உலக நாடுகளுக்கும் பரவி, வரலாறு காணாத பாதிப்புகளை கொரோனா தொற்று ஏற்படுத்திவிட்டது. தற்போது தடுப்பூசி உள்ளிட்ட காரணங்களால் உலக நாடுகள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றன.

இருப்பினும் சீனாவில் அண்மைக் காலமாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு தினசரி பதிவு செய்யப்படும் பாதிப்பு எண்ணிக்கைகள் உயர்ந்து வருகின்றன. நேற்று முன்தினம் அங்கு 1,082 பேருக்கு கொரோனா உறுதியாகியிருந்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதியானவர்களில் 193 பேருக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளதாகவும், 990 பேருக்கு கொரோனா நோய் பாதிப்பு அறிகுறிகள் இல்லை எனவும் சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா அறிகுறிகளோடு உறுதி செய்யப்பட்ட தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை 2,22,775 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. அங்கு இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,218 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.