தாமஸ் கோப்பையை முதன்முறையாக வென்ற இந்திய பேட்மிண்டன் அணி.. நேரில் அழைத்துப் பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி..!

தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியினரைப் பிரதமர் மோடி நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.

14 முறை சாம்பியனான இந்தோனேசிய அணியை மூன்றுக்குப் பூச்சியம் என்கிற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி முதன்முறையாகத் தாமஸ் கோப்பையை வென்றுள்ளது.

இதையடுத்து இந்திய அணியினரை நேரில் அழைத்துப் பாராட்டிய பிரதமர் மோடி, இது மிகப்பெரிய சாதனை எனக் குறிப்பிட்டார்.

நம்மால் முடியும் என்கிற எண்ணம் நம் நாட்டின் புதிய வலிமையாக மாறியுள்ளதாகத் தெரிவித்தார். விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான உதவிகளை அரசு செய்யும் எனப் பிரதமர் உறுதியளித்தார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.