தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்தவர்களுக்கான 4-ம் ஆண்டு நினைவு தினம்: பாதுகாப்பு பணியில் 2,500 போலீசார்..!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்தவர்களுக்கான 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், பாதுகாப்புக்காக 2,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அஞ்சலி செலுத்த வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவித்துள்ள போலீசார், நகரின் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், 5 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் தூத்துக்குடி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.