மனநலம் பாதித்தவரை கொன்றவர் கைது | Dinamalar

நீமுச் : மத்திய பிரதேசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை, ஆதார் அட்டை உள்ளிட்ட விபரங்களை கேட்டு அடித்துக் கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ரட்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் பவார்லால் ஜெயின், ௬௫. மனநலம் பாதிக்கப்பட்டிருந்த இவர், சமீபத்தில் மாயமானார்.

அவரை தேடியதில், நீமுச் மாவட்டத்தில் சாலையோரத்தில் பிணமாக கிடந்தார். இந்நிலையில், பவார்லால் மகனின் மொபைலுக்கு, ‘வாட்ஸ் ஆப்’ பில் ஒரு ‘வீடியோ’ வந்தது. அதில், பவார்லாலிடம், ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாளங்களை கேட்டு, ஒருவர் அவரை சரமாரியாக அடிப்பது பதிவாகிஇருந்தது. பவார்லால் மகன் போலீசில் புகார் தரவே, விசாரணையில், பவார்லாலை அடித்து கொலை செய்தது தினேஷ் குஷ்வாஹா, ௩௮, என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.