2,200 ஏக்‍கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்ததாக புகார்.. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் அறிவிப்பு.!

தூத்துக்குடியில் 2 கிராம விவசாயிகளின் 2 ஆயிரத்து 200 ஏக்‍கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்தது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வடக்கு சிலுக்கன்பட்டி,தெற்கு சிலுக்கன்பட்டி கிராமத்தில் முறைகேடாக பத்திரப்பதிவு நடந்தது தொடர்பாக சார்பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும், மாவட்ட பதிவாளரின் விசாரணை அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.