இந்தோனேசியாவில் 6 1 நிலநடுக்கம்: இந்தியப் பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை

இந்தியப் பெருங்கடலில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் “இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுனாமியை உருவாக்கும் திறன் கொண்டதாக இருக்கலாம்” என்று சுனாமி அறிவுறுத்தல் குழு தெரிவித்துள்ளது.

கிழக்கு திமோர் கடற்கரையில் வெள்ளிக்கிழமை (2022, மே 27)  6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, இருப்பினும் சேதம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.

இந்த நிலநடுக்கம் “இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுனாமியை (Tsunmai) உருவாக்கும் திறன் கொண்டதாக இருக்கலாம்” என்று அஞ்சப்படுகிறது.

கிழக்கு திமோருக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே பிளவுபட்டுள்ள திமோர் தீவின் கிழக்கு முனையில் இருந்து 51.4 கிலோமீட்டர் (32 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக USGS தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் – உச்சக்கட்ட சுனாமி எச்சரிக்கை

இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மற்றும் தணிப்பு அமைப்பு (IOTWMS) இப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது. கிழக்கு திமோர் தலைநகர் டிலியில் உள்ளவர்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தார்.  

கிழக்கு திமோர் மற்றும் இந்தோனேஷியா பசிபிக் “ரிங் ஆஃப் ஃபயர்” மீது அமர்ந்துள்ளன, இது தென்கிழக்கு ஆசியா வழியாகவும் பசிபிக் படுகை முழுவதும் பரவியிருக்கும் தீவிர நில அதிர்வு நடவடிக்கைகளின் வளைவாகும்.

பிப்ரவரியில், இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவைத் தாக்கிய 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒரு டஜன் மக்களைக் கொன்றது.

2004 ஆம் ஆண்டில், சுமத்ரா கடற்கரையில் 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது மற்றும் இந்தோனேசியாவில் சுமார் 170,000 பேர் உட்பட அப்பகுதி முழுவதும் 220,000 பேரைக் கொன்ற சுனாமியைத் தூண்டியது.

கிழக்கு திமோரில் 1.3 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.  

கோவிட் -19 தொற்றுநோயால் இந்தோனேசியாவின் பொருளாதாரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, உலக வங்கியின்படி 42 சதவீத மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | அட்லாண்டிக் பெருங்கடலின் கீழ் அரிய பூமராங் பூகம்பம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.