சிறுபோக பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் பல மாவட்டங்களில் தாமதம்

பல மாவட்டங்களில் சிறு போகத்திற்கான விதைப்பு மற்றும் நிலத்தை தயார்படுத்தும் பணிகள் தாமதமாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் சிறு போகத்திற்கான பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் நிறைவடையாவிட்டால், நாடு கடும் உணவு நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிடும் என்று நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் டி அபேசிறிவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இந்த நேரத்தில் நெற் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முடியாவிட்டால், அதற்கு பதிலாக வேறு பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் விவசாயிகளை அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.