பா.ஜ.க ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத் சிறையில் அடைப்பு: என்னென்ன பிரிவுகளில் வழக்கு?

Youtuber Karthik jailed 15 days on fraud case: அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில் பெயரை பயன்படுத்தி, ரூ.44 லட்சம் வசூலித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள, பாஜக ஆதரவாளரும், யூடியூபருமான கார்த்திக் கோபிநாத்தை 15 நாட்கள் சிறையில் அடையிலக்க அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதி பெறாமல் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோயிலை புனரமைக்கப் போவதாக கூறி, யூடியூபர் கார்த்திக் கோபிநாத் இணைய தளம் மூலம் ரூ.44 லட்சம் நிதி வசூலில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து, பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் செயல் அலுவலர் அரவிந்தன் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆவடி பகுதியைச் சேர்ந்த யூடியூபர் கார்த்திக் கோபிநாத் என்பவரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில் கார்த்திக் கோபிநாத் மீது 420, 406 மற்றும் 66(டி) தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், மோசடி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து அம்பத்தூர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதையும் படியுங்கள்: 959 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்; காவல்துறை அதிரடி

இந்நிலையில், ஜூன் 13-ம் தேதி வரை கார்த்திக் கோபிநாத்தை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க அம்பத்தூர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக அம்பத்தூர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட யூடியூபர் கார்த்திக் கோபிநாத்தை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்றபோது ஏராளமான பாஜகவினர் அம்பத்தூர் நீதிமன்ற வளாகத்தில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.