முத்துக்கள் இங்கினியாகல பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளன

அம்பாறை பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் (STF) மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கை ஒன்றில், பாரியளவிலான (76) யானை முத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன .

கடந்த திங்கட்கிழமை (28) அம்பாறை முகாமில் உள்ள பொலிஸ் விஷேட அதிரடிப் படை பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, பொலிஸ் விஷேட அதிரடிப் படை (STF) கட்டளை அதிகாரி வருண ஜயசுந்தரவின் கட்டளை மற்றும் ஆலோசனைகளுக்கு அமைவாக, தலைமை பொலிஸ் பரிசோதகர் எச். எம். ஏ. மனோகர உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் இந்த தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இகினியாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்திலும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 76 யானை முத்துக்களை வைத்திருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யானை முத்துக்கள் மிகவும் மதிப்புமிக்க பொருளாக விற்கப்படுகின்றன. யானைகளைக் கொன்று இந்த முத்துகளைப் பெறுவது ஒட்டுமொத்த சுற்றுச்சூழலுக்கும் பேரழிவாகும்.

இவ்வாறு முத்துக்களைப் பெற எத்தனை யானைகள் பலியாகியுள்ளன. அதிக மதிப்புள்ள இந்த முத்து ஒரு மில்லியன் முதல் ஐந்து மில்லியன் ரூபாய் வரை விற்பனையாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றிலேயே அண்மைக் காலத்தில், அதுவும் ஒரே பகுதியில் அதிக அளவிலான யானை முத்துக்கள் கைப்பற்றப்பட்ட  சம்பவம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.