யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானது…

டெல்லி: நாடு முழுவதும் மத்தியஅரசு பணிக்காக நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள்  இன்று வெளியானது. இதில் டெல்லியைச் சேர்ந்த ஸ்ருதிஷ்ர்மா முதலிடத்தை பிடித்துள்ளார்.  தேர்வு முடிவுகளை https://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் காணலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்தியஅரசு பணிகளுக்கான யுபிஎஸ்சி சிவில் தேர்வு ஏற்கனவே நடைபெற்று முடிவடைந்தது.  கடந்த ஜனவரி மாதம் எழுத்துத் தேர்வு நடை பெற்றது. இந்த  தேர்வு முடிவுகள் மார்ச் 17ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 5 முதல் மே 26ஆம் தேதி வரை நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்  முடிந்த நிலையில், இன்று தேர்வில் பங்கேற்றவர்களின் இறுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. யுபிஎஸ்சி இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளை https://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் காணலாம்.

தேர்வெழுதியவர்களில் 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது இந்த தேர்வில் டெல்லியைச் சேர்ந்த ஸ்ருதி ஷர்மா முதலிடத்தை பிடித்துள்ளார். தொடர்ந்து,   அங்கிதா அகர்வால், காமினி சிங்லா ஆகியோர் முதல் இடங்களை பிடித்துள்ள னர். தேர்வு முடிவுகள் வெளியாகி 15 நாள்களுக்குள் யுபிஎஸ்சி இணையதளத்தில், தேர்ச்சி பெற்றவர்கள் பெற்ற மதிப்பெண்களும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்பிறகு பணி நியமனங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.