தன் கழுத்தை தானே அறுத்துக் கொண்டு அங்குமிங்கும் ஓடிய இளைஞர்.! கன்னியாகுமரியில் பரபரப்பு.!

கன்னியாகுமரி மாவட்டம் அதங்கோடு பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் சென்னையில் இட்லி மாவு கடை நடத்தி வந்துள்ளார். இவர் கடந்த 31ம் தேதி சொந்த ஊருக்கு வந்த நிலையில் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அனைவரிடமும் சிடுசிடுப்பாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், நேற்று இரவு குழித்துறை நகராட்சி அலுவலகத்திற்கு எதிரே வந்த அந்த நபர் ஒரு கத்தியால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு வலிக்கிறது என்று அலறி அடித்துக் கொண்டு அங்குமிங்கும் ஓடியிருக்கிறார். பின்னர் அரசு மருத்துவமனைக்குள் வலியில் ஓடிச்சென்று காண்பித்துள்ளார். 

இது குறித்து காவல்துறையினருக்கு மருத்துவமனை நிர்வாகம் தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் விரைந்து வந்து அஜித்திடம் இருந்த கத்தியை கைப்பற்றிய முதலுதவி கொடுத்தனர். மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். 

பின்னர் அவர் எதற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்பது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வந்த நிலையில், தன்னை யாரோ தாக்கி விட்டதாகவும், ஊரில் இருவர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் உளறிக்கொண்டே இருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.