ஜாமீனில் எடுக்க மறுத்த பெற்றோர்..! – நண்பனை சொந்த வீட்டிலேயே திருடச் சொன்ன மகன்!

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர் செல்வேந்திரன். இவரது மகன் ஆனந்த லிங்கம். இவர், கஞ்சா வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு ஸ்ரீவைகுண்டம் கிளைச்சிறையில் கைதியாக உள்ளார். இந்த நிலையில், கடந்த 3-ம் தேதி ஆனந்தலிங்கத்தின் தந்தை செல்வேந்திரனும், அவரின் தாய் பார்வதியும் ஒரு நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றிருந்தனர். அவர்கள் வீடு திரும்பிய போது பீரோவில் இருந்த தங்க நகை மற்றும் பணம் திருட்டு போனது தெரிய வந்தது.

ஆறுமுகநேரி

இதில், 12 கிராம் தங்க நகையும், ரூ.2 லட்சம் பணமும் திருட்டு போனதாக ஆறுமுகநேரி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீஸாரின் தொடர் விசாரணையில் ஏரல் சேதுக்குவாய்த்தான் கிராமத்தைச் சேர்ந்த சத்தியமுகேஷ் என்ற சதீஷ் மற்றும் இவரது உறவினரான சொக்கப்பழங்கரை கிராமத்தைச் சேர்ந்த சச்சின் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக ஜாமீனில் எடுக்க பெற்றோர் மறுத்ததால், ஆனந்தலிங்கம் தன்  சொந்த வீட்டிலேயே நகை, பணத்தை திருட ஐடியா கொடுத்து உதவியது தெரிய வந்தது.  

இதுகுறித்து ஆறுமுகநேரி காவல் நிலைய போலீஸாரிடம் விசாரித்தோம், “செல்வேந்திரனின் மகன் ஆனந்தலிங்கம், கஞ்சா வழக்கில் கைதாகி ஸ்ரீவைகுண்டம் கிளைச்சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். தன்னை ஜாமீனில் எடுக்குமாறு பெற்றோரிடம் பலமுறை கூறியும், ஆனந்தலிங்கத்தின் பெற்றோர் மறுத்துள்ளனர். இந்த நிலையில்தான் செல்வேந்திரனின் வீட்டில் தங்க நகை மற்றும் பணம் திருடுபோனது.

ஆறுமுகநேரி

திருடப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ.7 லட்சம் என்றும் ரூ.20 லட்சம் என்றும் பின்னர் ரூ.40 லட்சம் என்றும் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் சொல்லப்பட்டது. இதில் சந்தேகம் அடைந்த பிறகுதான் விசாரணையை தீவிரப்படுத்தினோம்.  விசாரணையில் சத்தியமுகேஷ், அவரது உறவினர் சச்சின் ஆகிய இருவரையும் கைது செய்தோம். சத்தியமுகேஷ் மீது ஆறுமுகநேரி, குரும்பூர், திருச்செந்தூர் ஆகிய காவல் நிலையங்களில் 30 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சத்தியமுகேஷ், ஒரு வழக்கில் கைதாகி ஸ்ரீவைகுண்டம் கிளைச்சிறையில் இருந்த போதுதான் ஆனந்த லிங்கத்துடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் “எங்க அப்பா, அம்மா என்னை ஜாமீனில் எடுக்க எந்த முயற்சியும் எடுக்கல. எங்க வீட்ல பீரோவுல உள்ள பணம், நகையை திருடிட்டு வா. அந்த பணத்துல என்னை ஜாமீன்ல எடுத்துடு. மீதி பணத்துல நம்ம ஜாலியா இருக்கலாம்” எனச் சொல்லியுள்ளார்.

ஆறுமுகநேரி காவல் நிலையம்

அத்துடன் வீட்டின் எந்த வாசல் வழியாக போக வேண்டும், எந்த அறையில் பீரோ உள்ளது எனச் சொல்லி வழிகாட்டியுள்ளார். இதன் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த சத்தியமுகேஷ், ஆனந்தலிங்கத்தின் வீட்டினை நோட்டம் விட்டிருக்கிறார். அவரது பெற்றோர்கள் இல்லாத நேரத்தைப் பார்த்து பணம், நகையை திருடியிருக்கிறார் சத்தியமுகேஷ். இதற்கு உதவியாக தனது உறவினர் சச்சினை உடன் அழைத்துச் சென்றிருக்கிறார். சத்திய முகேஷிடமிருந்து 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்துள்ளோம்” என்றனர்.   

 Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.