விரைவில் வருது மின்சார டிராக்டர்: நிதின் கட்காரி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புனே: விரைவில் மின்சார டிராக்டர்கள் மற்றும் டிரக்குகளை அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் நடந்த விழாவில் நிதின் கட்காரி பேசியதாவது: எதிர்காலத்தில், எத்தனால், மெத்தனால் போன்ற மாற்று எரிபொருளும் மின்சார வாகனங்களும் தான் எதிர்காலத்தில் முக்கிய பங்காற்றும். 3 ஆண்டுகளுக்கு முன்பு, மின்சார வாகனங்கள் தொடர்பாக நான் பேசிய போது, பலர் கேள்வி எழுப்பினர். ஆனால், தற்போது, மின்சார வாகனங்களுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.

latest tamil news

மின்சார ஸ்கூட்டர்கள், கார்கள், பஸ்களை தொடர்ந்து, விரைவில் மின்சார டிராக்டர்கள் மற்றும் டிரக்குகளை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளேன். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

latest tamil news

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.