கணவர், மாமனார் மீது நடிகை அளித்தபுகாருக்கு நீதிமன்றம் இடைக்கால தடை| Dinamalar

பெங்களூரு : கணவர், மாமனார் மீது கன்னட நடிகை சைத்ரா ஹல்லிகேரி தொடர்ந்த வழக்கில், எப்.ஐ.ஆர்., மீதான நடவடிக்கை எடுக்க, கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.கன்னட திரைப்பட நடிகை சைத்ரா. இவர், தன் கணவர் பாலாஜி போத்தராஜு, மாமனார் போத்தராஜு ஆகியோர், தன் வங்கி கணக்கை பயன்படுத்தி, தங்க நகை கடன் வாங்கினர். என்னை ஏமாற்றி விட்டனர் என மைசூரு ஜெயலட்சுமிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.

இந்நிலையில், தங்கள் மீது போடப்பட்ட எப்.ஐ.ஆர்., மீது தடை விதிக்க கோரி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பாலாஜியும், அவரது தந்தை போத்தராஜூம் மனு தாக்கல் செய்திருந்தனர்.இவர்கள் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் ஷியாம் சுந்தர் கூறுகையில், ”பாலாஜி போத்தராஜ், விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்ததால், அவருக்கு எதிராக பொய் புகார் அளித்துள்ளார்,” என்றார்.இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், எப்.ஐ.ஆர்., தொடர்பாக மேற்கொண்ட விசாரிக்க, இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.