எரிமலை வெடிப்பு: பிலிப்பைன்சில் கடும் பீதி| Dinamalar

மணிலா : பிலிப்பைன்சில் எரிமலை வெடித்து அனல் காற்று மற்றும் சாம்பல் புகை வருவதால், அங்கு வசிக்கும் மக்கள் பீதியடைந்துஉள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் சோர்சோகன் மாகாணத்தில் புலுசான் என்ற இடத்தில் உள்ள எரிமலை, ஆபத்து நிறைந்த எரிமலைகளின் பட்டியலில் உள்ளது. இந்த எரிமலையில் நேற்று காலை லேசான அதிர்வு ஏற்பட்டது.

15 நிமிடத்துக்கும் மேல் அதிர்ந்த இந்த எரிமலையில் இருந்து சாம்பல் துகள் மற்றும் அனல் காற்று வெளியேறியது. அருகில் உள்ள கிராமங்களில் எரிமலை சாம்பல் விழுந்தது. இதனால் கிராம மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.புலுசான் எரிமலை பகுதியில் இருந்து 4 கி.மீ., சுற்றளவுக்குள் வசிக்க, ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் விமானங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.