மணிலா : பிலிப்பைன்சில் எரிமலை வெடித்து அனல் காற்று மற்றும் சாம்பல் புகை வருவதால், அங்கு வசிக்கும் மக்கள் பீதியடைந்துஉள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் சோர்சோகன் மாகாணத்தில் புலுசான் என்ற இடத்தில் உள்ள எரிமலை, ஆபத்து நிறைந்த எரிமலைகளின் பட்டியலில் உள்ளது. இந்த எரிமலையில் நேற்று காலை லேசான அதிர்வு ஏற்பட்டது.
15 நிமிடத்துக்கும் மேல் அதிர்ந்த இந்த எரிமலையில் இருந்து சாம்பல் துகள் மற்றும் அனல் காற்று வெளியேறியது. அருகில் உள்ள கிராமங்களில் எரிமலை சாம்பல் விழுந்தது. இதனால் கிராம மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.புலுசான் எரிமலை பகுதியில் இருந்து 4 கி.மீ., சுற்றளவுக்குள் வசிக்க, ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் விமானங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மணிலா : பிலிப்பைன்சில் எரிமலை வெடித்து அனல் காற்று மற்றும் சாம்பல் புகை வருவதால், அங்கு வசிக்கும் மக்கள் பீதியடைந்துஉள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் சோர்சோகன்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.