திருப்பதியில் விரைவில் இலவச தரிசன டோக்கன்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

திருப்பதி–”திருப்பதியில் பக்தர்களுக்கு இலவச தரிசன ‘டோக்கன்’கள் வழங்குவது, கோடைக்காலத்திற்குப் பின் துவங்கும்,” என, தேவஸ்தான செயல் அதிகாரி தர்மாரெட்டி தெரிவித்தார்.

latest tamil news

திருப்பதியில் உள்ள சீனிவாசம், விஷ்ணுநிவாசம், பூதேவி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட இடங்களில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன. சமீபத்தில், இது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த சேவையை கோடை காலம் முடிந்ததும் மீண்டும் துவக்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மாரெட்டி கூறியதாவது: இலவச தரிசன டோக்கன்களை பெற முறையான வரிசைகள் ஏற்படுத்தப்பட்டு, கோடை காலத்திற்குப் பின் வழங்கப்படும். ஆக., 7ல் ஆந்திரா முழுதும் தேவஸ்தானம் சார்பில் இலவச திருமணங்கள் நடத்தப்பட உள்ளன. மே மாதத்தில், இதுவரை இல்லாத வகையில், உண்டியல் வருவாய் 130.29 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.

latest tamil news

மேலும், இந்த மாதத்தில் ஏழுமலையானை 22.62 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்; ஒரு கோடியே 86 லட்சம் லட்டு பிரசாதம் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது; 10.72 லட்சம் பக்தர்கள் தங்கள் தலைமுடியை பக்தர்களுக்கு காணிக்கையாக செலுத்தினர்.

ஏழுமலையானுக்கு நேற்று முன்தினம் இரவு சென்னையைச் சேர்ந்த பக்தை சரோஜா சூரியநாராயணன், 4.150 கிலோ எடையில் 2.45 கோடி ரூபாய் மதிப்பில் வைரங்கள் பதிக்கப்பட்ட தங்க பூணுால் மற்றும் காசுமாலையை நன்கொடையாக வழங்கினார்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.