10 ஆம் வகுப்பு மாணவியின் வயிற்றுவலியை போக்குவதாக டுபாக்கூர் சாமியார் சேட்டை..!

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியில் பத்தாம் வகுப்பு படித்த மாணவிக்கு வயிற்று வலியை சரி செய்வதாக கூறி கர்ப்பிணியாக்கிய போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியை சேர்ந்த 15 வயது உடைய பத்தாம் வகுப்பு படித்த மாணவி ஒருவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனை உறவினர் மூலம் அறிந்து கொண்ட அதே பகுதியில் சாமியார் என சுற்றிவந்த 65 வயதான பழனி என்பவர் பள்ளி மாணவியின் தாயிடம் வயிற்று வலியை சரிசெய்ய பூஜை செய்தால் உடனடியாக சரியாகிவிடும் என கூறி நம்ப வைத்துள்ளார்.

சிறுமியின் தாயும் தனது மகளை போலி சாமியார் பழனியிடம் அழைத்துச் சென்றுள்ளார். வயிற்று வலியை சரி செய்வதாக கூறி போலி சாமியார், அந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தோடு, இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதில் வயிற்று வலி சரியாகாத நிலையில் அந்த சிறுமியை அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதில் அந்த சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

சிறுமியின் பெற்றோரிடம் நடத்திய விசாரணையில் சிறுமியை அழைத்துச் சென்று 65 வயது டுபாக்கூர் சாமியார் செய்த நள்ளிரவு பூஜை வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் போலி சாமியார் பழனி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு உடல் ரீதியாக ஏற்படும் பிரச்சனைகளை முறையான மருத்துவரிடம் அழைத்துச்சென்று குணப்படுத்த வேண்டும், போலிகளை நம்பினால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.