சோனியா மருத்துவமனையில் அனுமதி… உடல்நிலை குறித்து காங்கிரஸ் தகவல்!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த வாரம் (ஜூன் 2) கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. லேசான அறிகுறிகள் இருந்ததால் அவர் வீட்டிலேயே தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டிருந்தார்.

இந்த நிவையில் இன்று அவர் டெல்லியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை கங்கா ராமில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்று காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி ஆசோனியா காந்திக்கு அமலாக்கத் துறை அண்மையில் சம்மன் அனுப்பியிருந்தது. வரும் 16 ஆம் தேதி அவர் ஆஜராக வேண்டிய நிலையில், கொரோனா தொற்று காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி ராஜ்காட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற நாடு தழுவிய பாதயாத்திரை நிறைவு விழா ஜூன் 1 ஆம் தேதி நடைபெற்றது. அதில் சோனியா காந்தி யும் பங்கேற்றார்.

அதற்கு அடுத்த நாளே அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.