நான் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன் – மோடியை பற்றி பொய் கூறியதாக இ.மி.ச தலைவர் அறிக்கை


இந்தியாவின் அதானி குழுமம் சம்பந்தப்பட்ட மன்னார் காற்று மற்றும் சூரிய சக்தி திட்டம் தொடர்பாக வெள்ளிக்கிழமை (10) கோப் குழு விசாரணையில் தெரிவித்த கருத்துக்கு இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ மன்னிப்பு கோரியுள்ளார்.

கோப் விசாரணையில், இத்திட்டத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்குமாறு இந்தியப் பிரதமர் தமக்கு அழுத்தம் கொடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னிடம் அறிவித்ததாக இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ தெரிவித்திருந்தார்.

எதிர்பாராத அழுத்தம் மற்றும் உணர்ச்சிகளின் காரணமாக, இந்திய பிரதமரால் வலியுறுத்தப்பட்டது என்ற வார்த்தையை வரம்பில்லாமல் வெளிப்படுத்த நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன், இது முற்றிலும் தவறானது” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நான் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன் - மோடியை பற்றி பொய் கூறியதாக இ.மி.ச தலைவர் அறிக்கை

ஜனாதிபதி மற்றுப்பு

இதனிடையே, இந்தியாவின் அழுத்தம் மற்றும் அதானி நிறுவனம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் தலைவர் கோப் குழு முன்னிலையில் தெரிவித்த கருத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மறுத்திருந்தபார்.

தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள ஜனாதிபதி தனது மறுப்பினை பதிவு செய்துள்ளார்.

மன்னார் காற்றாலை மின் திட்டத்தை ஒரு குறிப்பிட்ட நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ வழங்குவதற்கு சர்வாதிகார அதிகாரத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்திருந்தார்.    

நான் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன் - மோடியை பற்றி பொய் கூறியதாக இ.மி.ச தலைவர் அறிக்கை



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.