தமிழ்நாட்டில் இன்று 23 மாவட்டங்களில் 332 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 171 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 23 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 171, செங்கல்பட்டில் 66, திருவள்ளூரில் 16 மற்றும் காஞ்சிபுரத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

கோவையில் 23, கன்னியாகுமரியில் 10, திருச்சியில் 7, சேலத்தில் 5, ஈரோடு மற்றும் சிவகங்கையில் தலா 4 பேருக்கும், மதுரை மற்றும் திருப்பூரில் தலா 3 பேருக்கும் திருநெல்வேலியில் 2 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், தேனி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

தவிர மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது.

இன்று மொத்தம் 11,030 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 194 ஆண்கள் 138 பெண்கள் என மொத்தம் 332 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

153 பேர் இன்று குணமடைந்த நிலையில் 1632 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.