மேல்சிகிச்சைக்காக இன்று இரவு அமெரிக்கா செல்கிறார் ‘அஷ்டவதானி’ டி.ராஜேந்தர்…

சென்னை: இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் இன்று இரவு 9.30 மணிக்கு மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், பாடலாசிரியர் என 8வகையான திறமைபெற்றவர் அஸ்டவதானி என்று அழைக்கப் படும் டி.ராஜேந்தர். 80களில் வெளியான அவரது திரைப்படத்துக்கு தனி வரவேற்பு உண்டு. இன்றுவரை அவரை திரைக்காவியங்களும், அதில் இடம்பெற்ற பாடல்களும் மறக்க முடியாதவை.

இந்த நிலையில், கடந்த மே மாதம் 19ம் தேதி  டி. ராஜேந்தருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது குடலில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். இதையடுத்து, அவர் மேல்சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லப்பட இருப்பதாக அவரது மகன் சிப்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மேல்சிகிச்சைக்காக டி.ராஜேந்தர் இன்று இரவு அமெரிக்கா செல்ல உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.