400 வகையான தாவரங்களை கொண்டு பசுமை வீடு கட்டிய ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்.. வீட்டிலேயே பழங்கள், காய்கறிகள் கிடைப்பதாக நெகிழ்ச்சி..!

உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் ஒருவர், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பசுமை வீடு கட்டியுள்ளார்.

ஆக்ராவில் வசிக்கும் சந்திரசேகர் சர்மா கட்டியுள்ள பசுமை வீடு, 400 வகையான ஆயிரம் தாவரங்களை கொண்டுள்ளது. வீட்டில் காலியிடங்களில் உள்ள செடிகளில் பூக்கள் பழங்கள், காய்கறிகள் கிடைக்கின்றன.

இதுகுறித்து பேசிய சந்திரசேகர் சர்மா, மற்ற வீடுகளைவிட தனது வீட்டின் வெப்பநிலை 5 டிகிரி குறைவாக உள்ளதாகவும், காற்றின் தரம் வெளிப்புறத்தைவிட நன்றாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.