அம்மா வீட்டுக்கு விருந்துக்கு அழைத்து.. புதுமண தம்பதிக்கு நிகழ்ந்த கொடூரம்! பதற வைத்த சம்பவம்


தமிழகத்தின் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த புதுமண தம்பதி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கும்பகோணம் அருகேயுள்ள சோழபுரம் துலுக்கவேலி கிராமத்தை சேர்ந்த சரண்யா என்பவர், மோகன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இவர்களது காதல் விவகாரம் சரண்யா வீட்டிற்கு தெரிந்தபோது, மோகன் வேறு சாதி என்பதால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த நிலையில் ரஞ்சித்குமார் என்பவருக்கும் சரண்யாவுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கட்டாய திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சரண்யா, வீட்டை விட்டு வெளியேறி தனது காதலர் மோகனை திருமணம் செய்துகொண்டார்.

இவர்கள் திருமணம் முடிந்த ஐந்து நாட்களில் அடகு வைத்த நகையை மீட்க சொந்த ஊருக்கு சென்ற புதுமணத் தம்பதியை, மாப்பிள்ளை விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளதாக சரண்யாவின் அண்ணன் வீட்டிற்கு அழைத்துள்ளார்.

அம்மா வீட்டுக்கு விருந்துக்கு அழைத்து.. புதுமண தம்பதிக்கு நிகழ்ந்த கொடூரம்! பதற வைத்த சம்பவம்

தங்கள் காதலை வீட்டில் ஏற்றுக்கொண்டார்கள் என்ற மகிழ்ச்சியில், மோகன்-சரண்யா ஜோடி அங்கு சென்று விருந்து சாப்பிட்டுள்ளார். அதன் பின்னர் வீட்டிற்கு வெளியே அவர்கள் வந்தபோது சக்திவேலும், உறவினர் ரஞ்சித்குமாரும் சேர்ந்து புதுமண தம்பதியை சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சரண்யாவின் தாய் அலறியுள்ளார். இதனையடுத்து தப்பியோடிய சக்திவேல், ரஞ்சித்குமார் இருவரும் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.