Airtel 5G: ஏர்டெல் 5ஜி; அல்ட்ரா பாஸ்ட் இன்டர்நெட்டுக்கு தயாரா? வெளியாகும் தேதி அறிவிப்பு!

Airtel 5G Launch: ஜூலை மாதத்தில் 5ஜி அலைக்கற்றை ஏலம் நிறைவடைந்தால், ஆகஸ்ட் மாதம் முதல் பயனர்களுக்கு சேவை வழங்கப்படும் என தொலைத்தொடர்பு துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இதில் ஏர்டெல் நிறுவனம் முதலாவதாக சேவையைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.

முதற்கட்டமாக 12 நகரங்களில் ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கும் என நிறுவனம் கூறியுள்ளது. ஆனால், டெலிகாம் நிறுவனங்கள் பலதும் ஊசலாட்டத்தில் இருக்கிறது. இதனால், 5ஜி ஏலத்தில் ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் முன்னிலை வகிக்கும் எனக் கூறப்படுகிறது.

Xiaomi: சியோமி போன்களின் பேட்டரியை வெறும் ரூ.499க்கு மாற்றலாம்!

ஏலத்தில் 72Ghz திறனுள்ள அலைக்கற்றை, ஐந்து பில்லியன் ரூபாய் முகமதிப்புடன் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் ஆயுள் காலம் 20 ஆண்டுகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

5ஜி அலைக்கற்றை ஏலம்

ஒன்றிய அரசு 20 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் 72097.85MHz அலைக்கற்றையை ஜூலை இறுதிக்குள் ஏலம் விடவுள்ளது. இதில் 600 MHz, 700 MHz, 800 MHz, 900 MHz, 1800 MHz, 2100 MHz, 2300 MHz, 3300 MHz மற்றும் 26 GHz ஆகியவை அடங்கும்.

Nothing Phone (1): லைட் எல்லாம் மின்னுது… வெளியான நத்திங் போனின் வீடியோ!

முதல் கட்டமாக, இந்தியாவில் முதல் 5ஜி சேவைகள் 13 முக்கிய நகரங்களில் தொடங்கப்படும். இந்த நகரங்களில் சென்னை, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், லக்னோ, புனே, காந்திநகர், ஜாம்நகர், மும்பை, ஏஐ அகமதாபாத், சண்டிகர் ஆகியவை அடங்கும்.

சிப் விநியோகச் சங்கிலியில் இந்தியா $30 பில்லியன் டாலர் முதலீடு

இந்தியா தனது தொழில்நுட்பத் துறையை மாற்றியமைக்கவும், சிப் விநியோகச் சங்கிலியை உருவாக்கவும் 30 பில்லியன் டாலரை செலவழிக்க உள்ளது. வெளிநாட்டு விநியோகஸ்தர்களால் தடை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய அரசு இம்முடிவை எடுத்துள்ளது.

Online Shopping: இத பாக்காம எந்த பொருளும் வாங்காதீங்க!

இந்தியாவில் செமிகண்டக்டர்கள், டிஸ்ப்ளேக்கள், மேம்பட்ட ரசாயனங்கள், நெட்வொர்க்கிங் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள், அத்துடன் பேட்டரிகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றின் உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதை இந்த முதலீடு நோக்கமாகக் கொண்டுள்ளது.

உலகளவில், இந்தியாவில் தான் சிப் தேவை ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மடங்கு அதிகரித்து வருகிறது. 2030ல் இந்தியாவின் செமிகண்டக்டர்கள் தேவை 110 பில்லியன் டாலர்களை எட்டும்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் சில அதிநவீன சிப் உற்பத்தியை நாட்டிற்குள் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இருப்பினும், இந்தியா இன்னும் முதிர்ந்த செயல்முறை சிப்புகளைக் கொண்டுவர விரும்புகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.