நேஷனல் ஹெரால்டு வழக்கு ஜூலை இறுதியில் ஆஜராக வேண்டும்: சோனியாவுக்கு அவகாசம்

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஜூலை இறுதியில் விசாரணைக்கு ஆஜராகும்படி சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை அவகாசம் அளித்துள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை 5 நாட்கள் விசாரணை நடத்தியது. அவரிடம் 50 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. அவரை அரசியல் காரணங்களுக்காக பாஜ.வின் உத்தரவின் பேரில் அமலாக்கத் துறை துன்புறுத்துவதாக குற்றம்சாட்டி, காங்கிரஸ் தலைவர்கள், எம்பி.க்கள் டெல்லியில் தொடர்ந்து பல நாட்கள் போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. சில தினங்களுக்கு முன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர், விசாரணைக்கு ஆஜராக மேலும் சில வாரங்கள் அவகாசம் வழங்கும்படி அமலாக்கத் துறைக்கு நேற்று முன்தினம் கடிதம் எழுதினார். இதை ஏற்ற அமலாக்கத் துறை, ஜூலை கடைசி வாரத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி சோனியாவிற்கு அவகாசம் அளித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.