முகப்பரு மற்றும் சரும பிரச்சினைகளுக்கு நிரந்த தீர்வு வேண்டுமா? இந்தவொரு பொருளை இப்படி பயன்படுத்தி பாருங்க


எப்சம் உப்பு பல்வேறு அற்புத நன்மைகளைக் கொண்டுள்ளது. இதனை வீட்டில், தோட்டத்தில் மற்றும் அழகுக் குறிப்புகளில் பலவிதமாகப் பயன்படுத்தலாம்.

குறிப்பாக முகப்பரு, கரும்புள்ளிகள், சரும பொலிவின்மை உள்பட அனைத்துவிதமான சரும பிரச்சினைகளையும் போக்கும் தன்மை எப்சம் உப்புக்கு உண்டு.

எப்சம் உப்பைப் பயன்படுத்துவது முகப்பரு மற்றும் தழும்புகள் ஏற்படுவதை தடுக்க உதவும்.

அந்தவகையில் தற்போது இதனை எப்படி சருமத்திற்கு பயன்படுத்தலாம் என்று பார்ப்போம். 

முகப்பரு மற்றும் சரும பிரச்சினைகளுக்கு நிரந்த தீர்வு வேண்டுமா? இந்தவொரு பொருளை இப்படி பயன்படுத்தி பாருங்க

  • ஒரு கிண்ணத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் எப்சம் உப்பை எடுத்துக்கொள்ளவும். அதில் சிறிதளவு பாதாம் எண்ணெய் சேர்க்கவும். இரண்டையும் நன்றாக குழைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடலாம்.
  • அரை டீஸ்பூன் எப்சம் உப்பை முகத்தை சுத்தம் செய்யப் பயன்படுத்தும் க்ரீமில் கலந்து முகத்தில் தேய்க்கவேண்டும். பிறகு இதைக் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இது, முகப்பரு போக்க சிறந்த மருந்து. 
  • அரை கப் எப்சம் உப்பை இளஞ்சூடான ஒரு பக்கெட் நீரில் கலந்துகொள்ள வேண்டும். இதில் பத்து நிமிடங்கள் காலை முக்கி வைத்திருந்தால், கால் அரிப்பு, கால் துர்நாற்றம், கால் வெடிப்பு போன்றவை நீங்கும்.  
  • ஒரு டீஸ்பூன் எப்சம் உப்பை பெட்ரோலியம் ஜெல்லியில் கலந்துகொள்ள வேண்டும். இதை உதட்டில் தடவிவந்தால், உதடு மென்மையாக மாறும். வறண்ட உதடுகள் எப்சம் உப்பால் சரியாகும்.
  • சிறிது எப்சம் உப்பை ஹேர் கண்டிஷனரில் கலந்து தலைக்குத் தேய்க்கவேண்டும். இதை இருபது நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்துவந்தால், முடியில் உள்ள நச்சுப்பொருட்கள் வெளியேறும். உச்சந்தலை தூய்மையாகும். முடி வளர்ச்சி அதிகமாகும்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.