ரூ.60 ஆயிரம் கோடி நன்கொடை : அதானி அறிவிப்பு| Dinamalar

புதுடில்லி: தன், 60வது பிறந்தநாளையொட்டி, பல்வேறு சமூக நலப் பணிகளுக்காக, 60 ஆயிரம் கோடி ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார், பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி.

குஜராத்தைச் சேர்ந்த கவுதம் அதானி தற்போது ஆசியாவின் மிகப் பெரும் பணக்காரராக உள்ள அவர், பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வருகின்றார்.


இந் நிலையில், அதானி குழுமம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
கவுதம் அதானியின் தந்தை சாந்திலால் அதானியின் நூற்றாண்டை ஒட்டியும், தன்னுடைய, 60வது பிறந்த நாளையொட்டியும், பல்வேறு சமூக நலப் பணிகளுக்காக நன்கொடை அளிக்க கவுதம் அதானி முடிவு செய்துள்ளார். அதன்படி, 60 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை அளிக்கப்பட உள்ளது.

சுகாதாரம், கல்வி, திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் இந்த நன்கொடை பயன்படுத்தப்படும். இதை அதானி அறக்கட்டளை மேற்கொள்ளும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.