ஈரோடு: ஈரோட்டில் சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரத்தில் சிறையிலுள்ள 4 பேரை மருத்துவக்குழு விசாரிக்க அனுமதி வழங்கியது. சிறைகளில் உள்ளவர்களிடம் வரும் 4ம் தேதி மருத்துவக்குழு விசாரணை நடத்த ஈரோடு மகிளா நீதிமன்றம் அனுமதி அளித்தது. கோவை, ஈரோடு சிறை கண்காணிப்பாளர் முன்னிலையில் மருத்துவக்குழு விசாரணை நடத்தலாம் என நீதிபதி மாலதி தெரிவித்தார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/06/1656578778_Tamil_News_6_30_2022_44234866.jpg)