திக்கம் வடிசாலையை தனியாருக்கு வழங்குவதற்கான தீர்மானம் இடைநிறுத்தம்

திக்கம் வடிசாலையை தனியார் முதலீட்டாளர்களுக்கு கையளிப்பதன் மூலம் அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீடு காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திக்கம் வடிசாலை நிர்வாகத்தினர் (30.06.2022) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துஇ திக்கம் வடிசாலையை தனியாருக்கு வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும்இ குறித்த முயற்சிகளை நிறுத்துமாறும் வலியுறுத்தினர்.

இதனையடுத்து துறைசார் அமைச்சருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்.

தனியார் முதலீட்டாளர்களும் சம்மந்தப்பட்ட நிர்வாகத்தினரும் இணைந்த பொறிமுறை ஒன்றின் ஊடாக திக்கம் வடிசாலை அபிவிருத்தி செய்யப்படுமானால் ஆரோக்கியமானதாக இருக்கும் என்ற கருத்தினை கடற்றொழில் அமைச்சர் முன்வைத்தார்.

கடற்றொழில் அமைச்சரின் கருத்தினை ஏற்றுக்கொண்ட துறைசார் அமைச்சர் ரமேஸ் பத்திரனஇ திக்கம் வடிசாலையை தனியாரிடம் கையளிக்கும் தீர்மானத்தை இடைநிறுத்துவதாகவும், இதுதொடர்பாக விரிவாக ஆராய்ந்து யாரையும் பாதிக்காத வகையில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.