சென்னை சைதாப்பேட்டை திடீர் நகரை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அவர் நண்பர்களுடன் வெளியில் செல்வதாக கூறி சென்றுள்ளார். அவர் தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு பெரும்பாக்கம் ஏரிக்கு வந்துள்ளனர். அதன்பின், ஏரியில் இறங்கி உள்ளார்.அப்போது விஜயகுமார் தண்ணீரில் மூழ்கினார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஏரியில் மூழ்கியவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவானதால் தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டது.
மறுநாள் காலை மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட்ட போது அவரின் உடலை மீட்டனர்.
அதன்பின் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.