பெங்களூரு, : பெங்களூரு தெற்கு எம்.பி.,யும், பா.ஜ., யுவ மோர்ச்சா தேசிய தலைவருமான தேஜஸ்வி சூர்யா, அரசு மருத்துவமனையை தனியார் மயமாக்க முயற்சிப்பதாக தொழிலாளர் அமைப்புகள் குற்றம் சாட்டினர். ஆனால், இதை அவர் மறுத்துள்ளார்.கர்நாடக சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள், தொழிலாளர்கள் சங்க தலைவர் ஆனந்த் சுப்பாராவ், பெங்களூரில் நேற்று கூறியதாவது:
பெங்களூரு தெற்கு எம்.பி.,யும், பா.ஜ., யுவ மோர்ச்சா தேசிய தலைவருமான தேஜஸ்வி சூர்யா, அரசு மருத்துவமனையை தனியார் மயமாக்க முயற்சிக்கிறார். இதற்காக, முதல்வர் பசவராஜ் பொம்மை, போக்குவரத்து துறை அமைச்சர் ஸ்ரீராமுலு, அதிகாரிகளை சந்தித்து, கே.எஸ்.ஆர்.டி.சி., ஊழியர்களுக்கான அரசு மருத்துவமனையை, தனியார் மயமாக்க நெருக்கடி கொடுக்கிறார்.ஜெயநகரில் உள்ள இந்த மருத்துவமனையில் 10 ஆண்டுகளாக ஊழியர்கள் சிகிச்சை பெற்று, பயனடைந்து வருகின்றனர். இங்கு டயாலிசிஸ் மையம் அமைப்பதற்காக, வாசவி குழுமத்துக்கு 30 ஆண்டு குத்தகைக்கு விட விரும்புகிறார்.
ஆனாலும், மருத்துவமனையை விரிவுபடுத்தி நவீனப்படுத்த வேண்டும். தேஜஸ்வி சூர்யா நிதி வழங்கினால், டயாலிசிஸ் மையம் நன்றாக கட்ட முடியும். கே.எஸ்.ஆர்.டி.சி., ஓட்டுனர், 30 ஆண்டுகள், தன் சேவையை முடித்தவுடன், அவருக்கு ஏற்படும் உடல் உபாதைகளை சரி செய்ய, சிறப்பு கவனம் தேவைப்படும்.இப்போதே இந்த வசதியை பெற்றால், தனியார் மயமாக்கல் தேவைப்படாது. வாக்காளர்களை கவருவதற்காக, தனியார் மயமாக்கும் திட்டத்தை செயல்படுத்த விரும்புகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.இது குறித்து எம்.பி., தேஜஸ்வி சூர்யாவிடம் கேட்டபோது, ”கே.எஸ்.ஆர்.டி.சி., மருத்துவமனையை தனியார் மயமாக்க, அரசு அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுக்கவில்லை,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement