உடல் கூராய்வுக்கு பிறகு தெக்களூர் மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

திருவள்ளுர் மாவட்டம் கீழச்சேரியில் உள்ள பள்ளி விடுதியில் நேற்று தற்கொலை செய்துக்கொண்ட + 2 மாணவியின் உடல், உடல் கூராய்வுக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருவள்ளுர் அரசு மருத்துவமனையில் மாணவியின் உடலை வாங்க பெற்றோரும், உறவினர்களும் முதலில் மறுத்தனர். பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் மாணவியின் உடல் சொந்த ஊரான திருத்தணியை அடுத்த தெக்களூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அமைதியான முறையில் மாணவியின் இறுதி சடங்குகள் நடைப்பெற்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.