சேலம்: மொபட் மீது கார் மோதி விபத்து.! பெண் பலி

சேலம் மாவட்டத்தில் மொபட் மீது கார் மோதி விபத்தில் பெண் உயிரிழந்துள்ளார்.

சேலம் மாவட்டம் கல்பாரப்பட்டி நாடார் தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி பிரியா(27). இவர் மக்கள் நலப் பணியாளராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் பிரியா வழக்கம் போல் வேலையை முடித்துவிட்டு தனது மொபட்டில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது சீராகப்பாடி அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது, கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக பிரியா மொபட் மீது மோதியது. 

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பிரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.