ஒன்றாக பிறந்தார்கள்; ஒரே மார்க் எடுத்தார்கள்: இரட்டையரின் அபூர்வ சாதனை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கூர்கான்: கூர்கானில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஐஎஸ்சி பிரிவில் படித்த இரட்டையர்கள், பிளஸ் 2 பொதுத்தேர்வில் கிட்டத்தட்ட ஒரே மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

டில்லி ஹரியானா மாநில எல்லையில் உள்ள கூர்கானில், ஐஎஸ்சி பாடங்கள் நடத்தப்படும் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருபவர்கள் ஆனந்திதா மிஸ்ரா மற்றும் ஆதித்யா மிஸ்ரா. இவர்கள் 2 நிமிட இடைவெளியில் பிறந்த இரட்டையர்கள். 17 வயதாக இவர்கள் கடந்தை 2020ம் ஆண்டு நடந்த பிளஸ் 2 தேர்வில் இருவரும் ஒரே மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தனர்.

தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்விலும் இருவரும் கட்டத்தட்ட ஒரே மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆனந்திதா 99.75 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார். ஆதித்யா 99.50 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார். இருவருக்கும் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதவியல் ஆகியன ஒன்றாக இருந்தன. அதேநேரத்தில் ஆனந்திதா பொருளாதார பாட பிரிவையும், ஆதித்யா கணிப்பொறி அறிவியல் பாடப்பிரிவையும் தேர்வு செய்துள்ளார்.

latest tamil news

இது தொடர்பாக ஆதித்யா கூறுகையில், எங்களது இருவருக்கும் இடையே எப்போதும் ஆரோக்கியமான போட்டி இருக்கும். ஒவ்வொரு நாள் இரவும் ஒன்றாக அமர்ந்து சந்தேகங்களை தீர்த்து கொள்வோம். படிப்பு முறையில் வெவ்வேறு முறையை பின்பற்றினோம். பாடங்களை ஆனந்திதா இரு முறை படிப்பார். அவரது வகுப்பில் 18 பேர் உள்ளனர். எனது வகுப்பில் 58 பேர் உள்ளனர். மேற்படிப்புக்கு பிரிட்டன் மற்றும் சிங்கப்பூர் செல்லும் திட்டம் உள்ளது என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.