புதுடெல்லி: விமானிகளும், பணியாளர்களும் பணியில் இருக்கும்போது மது அருந்திவிட்டு வந்துள்ளர்களா? குறிப்பிட்ட அளவு மது அருந்தி விட்டு விமானம் ஓட்டுவதற்கு விமானிகளுக்கு அனுமதி வழங்கும் திட்டம் அரசிடம் உள்ளதா?’ என்று மக்களவையில் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, ‘இந்தாண்டு ஜூன் வரையில் பணியின்போது மது அருந்தி விட்டு வந்த 14 விமானிகள் மீது வழக்கு பதிவு செய்து, பைலட் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பணியின் போது மது அருந்திவிட்டு விமானத்தை இயக்குவதற்கு அனுமதிக்கும் திட்டம் இல்லை,’ என தெரிவித்தார்.