கல்குவாரியில் சரிந்து விழுந்த பாறை; பறிபோன 2 உயிர்கள் – `கல்குவாரி மூடப்படும்’ – பெரம்பலூர் ஆட்சியர்

கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் இரண்டு பேர் பலியான சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க ஒன்றியச்செயலாளர் நடத்திவரும் கல்குவாரியில் விபத்து நடந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், கவுள்பாளையம் பகுதியில் உள்ள மலையில் கல்குவாரிகள் செயல்படுகின்றன. இம்மாவட்டத்தில் 12-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறன. இதில் நூற்றுக்கணக்கானோர் தினம் தோறும் வேலைபார்த்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை சுப்பிரமணியன், வினோத் ஆகிய இருவரும் வழக்கமான பணிகள் செய்து கொண்டிருந்தபோது அவர்கள் மீது பாறைகள் சரிந்து விழுந்தன.

இதில், சுப்ரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த வினோத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

அதிகாரிகள் ஆய்வு

தகவலின் பெயரில் மருவத்துர்கள், போலீஸார் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காகப் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கல்குவாரி

தகவல் அறிந்த ஆட்சியர் வெங்கடப்பிரியா மற்றும் எஸ்.பி மணி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விபத்துக்கான காரணத்தை ஆய்வு செய்து வருகின்றனர். விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து கல்குவாரி மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் வெங்கடப்பிரியா தெரிவித்துள்ளார்.

என்ன நடந்தது என்று வேலைபார்த்த முனியமுத்து என்பவரிடம் பேசினோம். “நாங்கள் தினம் தோறும் கல்குவாரியில் வேலை செய்வது வழக்கம். அந்த வகையில் இன்று காலையில் வேலை செய்துகொண்டிருந்தபோது பாறை சரிந்து விழுந்து சுப்பிரமணியன், வினோத் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆட்சியர் ஆய்வு

இந்த கல்குவாரி நடத்துவது பெரம்பலூர் அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் செல்வகுமார். இவ்வழக்கை போலீஸார் முறையாக விசாரிக்க வேண்டும். உயிரிழந்தவருக்கு குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.