கோவையில் கந்துவட்டிக்கு பணம் கொடுத்த 17 பேர் கைது.!

கோவையில், பொதுமக்களிடம் ஆவணங்களை வாங்கி வைத்துக் கொண்டு கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வந்த 17 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாவட்டம் முழுவதும் சுமார் 41 இடங்களில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் 17 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து 1.29 கோடி ரூபாய் ரொக்கம், 211 வங்கி கணக்கு புத்தகங்கள், சொத்து பத்திரங்கள், நிரப்பப்படாத காசோலைகள், வெற்று காகிதத்தில் கையெழுத்திட்ட பத்திரங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

கடந்த ஒரு வார காலமாக கண்காணித்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கந்துவட்டியால் பாதிக்கப்படும் மக்கள் உடனடியாக புகார் தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.