சென்னை: போதை பொருட்களின் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க ஒத்துழைப்பு தேவை என்று அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக போதைப்பொருள் உள்ளது. போதைப் பாதை அழிவுப் பாதை என்பதை நாடும், நாட்டு மக்களும் அறிவார்கள் என முதலமைச்சர் கூறியுள்ளார்.