அண்ணாசாலை, பெரம்பூர், தாம்பரம்.. சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று மின்தடை

சென்னையின் அண்ணாசாலை, பெரம்பூர், தாம்பரம், ஐடி காரிடார், தரமணி, போரூர் ஆகிய பகுதிகளில் பராமரிப்புப் பணிகளுக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

சென்னையின் சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும், பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ணாசாலை: ஃப்ளவர் பஜார் ராட்டன் பஜார், என்எஸ்சி போஸ் சாலை, தேவராஜ முதலி தெரு, மின்ட் தெரு, நைனியப்ப நாய்க்கன் தெரு, ஈ.வி.ஆர்.சாலை, தஞ்சை முருகப்பா தெரு, அந்தோணி தெரு, பொன்னப்பா தெரு, வால் டாக்ஸ் சாலை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

பெரம்பூர்: பெரியார் நகர் முத்துகிருப்பா சாலை, ஜிகேஎம் காலனி, ராதாகிருஷ்ணன் நகர், கருணாநிதி தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

தாம்பரம்: சித்தலபாக்கம் ரைஸ் மில் ரோடு, ஜெயச்சந்திரன் நகர், ஜல்லடியன்பேட்டை, மேடவாக்கம் பஞ்சாயத்து அலுவலகம் பின்புறம், பத்மாவதி நகர் பெரும்பாக்கம் வேளச்சேரி மெயின் ரோடு, பொன்னியம்மன் கோவில் தெரு, பல்லவன் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

ஐடி காரிடார் தரமணி பகுதி: எம்சிஎன் நகர், ஆனந்தா நகர், பஞ்சாயத்து சாலை, பள்ளிக்கரணை, ரிங்ரோடு, சாய் நகர், ஐஐடி காலனி, டெலிபோன் நகர், எஸ்பிஐ காலனி, 200 அடி ரேடியல் சாலை, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் சாலை, ஓஎம்ஆர் பகுதி, சிபிஐ காலனி, வேளச்சேரி பகுதி பிரதான சாலை, சீவரம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

போரூர்: பூந்தமல்லி டிரங்க் ரோடு, ஆஞ்சநேயர் கோயில் தெரு, வைத்தீஸ்வரன்கோயில் தெரு, ராமானுஜகூடம் தெரு, சுந்தர் நகர், புது தெரு, கங்கா சாரதி நகர், பிள்ளையார் கோயில் தெரு. நன்பர்கள் நகர், வசந்தபுரி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.